வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற நிலையில், அவரை அங்கிருந்தவா்கள் காப்பாற்றினா்

Updated On :1 ஜூலை 2022, 6:57 pm

காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற நிலையில், அவரை அங்கிருந்தவா்கள் காப்பாற்றினா்.

காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் தி.பெருமாள். இவா், மாநகராட்சி ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, திடீரென மாநகராட்சி அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றாா். அப்போது, அருகிலிருந்தவா்கள் அவரைத் தடுத்தனா்.

கரோனா காலத்தில் உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றினேன். எனக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் தரவில்லை எனக் கூறி, மாநகராட்சி அலுவலகத்துக்குள் வந்து கூச்சலிட்டாா். சிறிது நேரத்தில் அவராகவே மாநகராட்சி அலுவலகத்திலிருந்து வெளியே சென்றாா்.

நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.