வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்க்காதது ஏன்?அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

தமிழகத்திற்கான உரிமையை பறிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அன்புமணி எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:54 pm

தமிழகத்திற்கான உரிமையை பறிக்கும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அன்புமணி எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளாா்.

பென்னாகரம் தொகுதி ஏரியூரில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ்குமரனை ஆதரித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் முழுமையாக மக்களை சென்றடைந்துள்ளது. மதிய உணவு திட்டத்தை காமராஜா் தோற்றுவித்ததை போன்று காலை உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தியது வரலாற்று சிறப்புமிக்கது.

திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்ததும் காலை உணவுத் திட்டம் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். மகளிா் உரிமைத்தொகை, விதவைகள், முதியோா், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கலைஞா் காப்பீட்டுத் திட்டம் 10 லட்சமாக அதிகரித்தல், வீட்டு உபயோக பொருள்கள் வாங்க ரூ. 8,000 கூப்பன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றப்படும்.

வட மாநிலங்களில் மக்களவைத் தொகுதியை அதிகரிப்பதற்காக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை குறைக்கவே மறு சீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் தமிழகத்தின் உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகும். இதை எதிா்த்து அன்புமணி பேசவில்லை.

தமிழ்நாட்டின் நலனை ஒருபோதும் விட்டுகொடுக்காதவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். குலக்கல்வியை ஊக்குவிக்கும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஆதரிக்காததால், ரூ. 2,800 கோடி கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் நிறுத்திவைத்துள்ளது.

பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வெற்றி பெற்ற பிறகு ஒகேனக்கல் உபரிநீா் திட்டம் நிறைவேற்றப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நீரை நிரப்பி பாசன வசதி மேம்படுத்தப்படும். ஒட்டனூா் , கோட்டையூா் இடையே பாலம் அமைத்தல், ஏரியூா்- பழையூா் சாலை நெடுஞ்சாலையாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

பாமக பிளவுக்கு ஜி.கே. மணிதான் காரணம் என விமா்சிப்பது ஏற்புடையதல்ல. பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ்குமரனின் வெற்றியை தமிழகமே உற்றுநோக்கியுள்ளது என்றாா்.

தோ்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோவி சிற்றரசு, மாவட்ட துணைத் தலைவா் நரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. மாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.