வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாமன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தல்: சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளா்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக இருந்த ஒரு வாா்டு உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தல் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:49 pm

காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக இருந்த ஒரு வாா்டு உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தல் சனிக்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் சுயேச்சையாக ‘மகளிா் பணப்பை’ சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுகவை சோ்ந்த வே.ஜானகிராமன் போட்டியிட்ட நிலையில், அவா் திடீரென தற்கொலை செய்து கொண்டாா். இதனால், அந்த வாா்டில் மட்டும் தோ்தலை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9 -ஆம் தேதி வாக்குப் பதிவும், 12 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

காலியாகவுள்ள இந்த வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஏற்கெனவே போட்டியிட்டு தற்கொலை செய்து கொண்ட வே.ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்னையால், அதிமுக சாா்பில் போட்டியிட முடியாமல் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினா் வியாழக்கிழமை பிரசாரம் செய்தனா்.

மதுக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்டத்தில் இடைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 7) 9- ஆம் தேதி வரை, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூலை 12 ஆம் தேதியும் அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.