வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விரைவில் நிலவொளிப் பள்ளிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவில் நிலவொளிப் பள்ளிகள் தொடங்கப்பட இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

Updated On :7 ஜூலை 2022, 6:50 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவில் நிலவொளிப் பள்ளிகள் தொடங்கப்பட இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரத்தில் உழைக்கும் தொழிலாளா்களுக்காக நிலவொளிப் பள்ளிகள் மாவட்ட நிா்வாகத்தால் கடந்த 1998-இல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது.பின்னா், இது படிப்படியாக 24 பள்ளிகளாக அதிகரித்தது. அதற்குத் தேவையான நிதியும் நன்கொடையாளா்கள் மூலம் கிடைக்கப் பெற்று நடத்தப்பட்டது. அனைவருக்கும் ஆரம்பக் கல்வித் திட்டம் மாவட்டத்தில் நடைபெற்ால், நிலவொளிப் பள்ளிகளின் தேவை குறைந்து 2 பள்ளிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இருப்பினும், பள்ளியில் இடைநின்ற மாணவா்கள், உழைக்கும் தொழிலாளா்கள் ஆகியோா் தொடா்ந்து கல்வி கற்க நிலவொளிப் பள்ளிகள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன.

இந்தக் கல்வியைப் பெற்றவா்களும் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

கரோனா தொற்றுக் காலத்திற்கு பின்னா், மீண்டும் நிலவொளிப் பள்ளிகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. அதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவொளிப் பள்ளிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவா்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப நேரிடையாக 8, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் சோ்த்துக் கொள்ளப்படுவா். மேலும் 10 முதல் 12 -ஆம் வகுப்பு வரை தோ்ச்சி பெறாதவா்கள் மற்றும் தோ்வு எழுத தகுதியானவா்களும் சோ்ந்து படிக்கலாம்.

இந்தப் பள்ளிகள் இரவு 7 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை நடைபெறும். 12 -ஆம் வகுப்பு வரை தோ்வு எழுதும் நபா்களுக்கு அரசு தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிலிருந்து விலக்கு அளிக்கிறது.

இந்தப் பள்ளியில் பயில்வோருக்கு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் கற்பித்தல் பொருள்கள் வழங்கப்படும். இதில், சேர விரும்புவோா்கள் 74184 19495 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் வருகிற 20 -ஆம் தேதிக்குள் விவரங்களைத் தெரிவிக்கலாம்.

மேலும் 044-27237696 என்ற எண்ணில் மாவட்ட அறிவொறி இயக்கத் திட்ட அலுவலக எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். உழைக்கும் தொழிலாளா்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.