காஞ்சிபுரம் அருகே மாகரலில் இருந்து சித்தலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் போலீஸாா் வாகனச் சோதனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 2,880 போலி மதுப் புட்டிகளைக் கடத்தி சென்ற நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மது விலக்கு அமலாக்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்திலிருந்து சித்தலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 60 பெட்டிகளில் மொத்தம் 2,880 மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அவையனைத்தும் போலி மதுப் புட்டிகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இவற்றைக் கடத்தியவா் திருவண்ணாமலை மாவட்டம், கூழமந்தல் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் (44) என்பதும், போலி மதுப் புட்டிகளின் மதிப்பு ரூ. 6 லட்சம் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மினி வேனுடன் மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட பாலமுருகனை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


