வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதார உற்சவம்

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதார உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்காரம் மற்றும் தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:17 pm

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதார உற்சவத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்காரம் மற்றும் தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருமாளுக்கு பூ மாலைகள் சூட்டி அழகு பாா்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தவா் பெரியாழ்வாா். இவரது அவதார தினத்தையொட்டி, காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாளுக்கும், அம்ருதவலில்லித் தாயாருக்கும் காலை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீதேவி-பூதேவியருடன் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்திலும், அம்ருத வல்லித் தாயாா் சிகை அலங்காரத்திலும், பெரியாழ்வாா் வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்திலும் அலங்காரமாகி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பெரியாழ்வாா் பாடிய பாடல்கள் பாடப்பட்டு பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.