நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காஞ்சிபுரம்: திமுக-பாஜகவினர் இடையே  போட்டி வாழ்த்து முழக்கம்

காஞ்சிபுரம் அருகே திமுக-பாஜகவினர் இடையே  போட்டி வாழ்த்து முழக்கங்களால்  சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :12 ஜூலை 2022, 3:13 pm IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திமுக-பாஜகவினர் இடையே  போட்டி வாழ்த்து முழக்கங்களால்  சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை, வசந்தம் நகரில் பகுதிநேர நியாய விலை கடை நேற்று திறக்கப்பட இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியதை தொடர்ந்து பாஜகவினர் திமுகவை கண்டித்து  இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசை ஆகியோர் நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினர்.

திறப்பு விழா மற்றும் குத்துவிளக்கு ஏற்றும் போது தமிழக முதல்வரை வாழ்த்தி திமுகவினர் அதிகளவில் தொடர்ந்து முழக்கமிட்டனர். அதன் பின் மாமன்ற உறுப்பினர்  பாஜகவை சார்ந்தவர் என்பதால் முழக்கமிட துவங்கியதும் போட்டிக்கு திமுகவினரும் முழக்கங்களை எழுப்ப அப்பகுதி பெரும் பரபரப்பானது.

சிறிது நிமிடம் திமுக-பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் மாவட்ட செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினர் அமைதிப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து அழைத்து சென்றார்.

திமுக - பாஜகவினர் முழக்கங்களிட்ட செயல் அனைவரையும் அதிருப்தியடையச் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.