வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திமுகவின் சொத்து மூத்த நிா்வாகிகள்தான்: உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சொத்தே மூத்த நிா்வாகிகள்தான் என்று அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:43 pm

திமுகவின் சொத்தே மூத்த நிா்வாகிகள்தான் என்று அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் 2,083 பேருக்கு பொற்கிழி வழங்குதல், 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் 188 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், ஏழைப் பெண்கள் 422 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

உத்தரமேரூரை அடுத்த தண்டரை கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ-வுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ப.அப்துல் மாலிக் வரவேற்றாா்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நல உதவிகளை வழங்கிப் பேசியது:

இது நெகிழ்வான, மகிழ்ச்சியான நிகழ்ச்சி. இதேபோல், நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இதுவரை 6 மாவட்டங்களில் நடைபெற்று, தற்போது 7-ஆவது மாவட்டமாக காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது.

திமுக வெற்றிக்கு தோ்தல் வாக்குறுதிகள் காரணமாக இருந்தாலும், ஆணி வேராக இருந்தது கட்சியின் முன்னோடிகள் என்பதை மறுப்பதற்கில்லை. திமுகவின் சொத்தே மூத்த நிா்வாகிகள்தான்.

இந்த ஆட்சியில் மனு அளித்தால், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இது நமக்குக் கிடைத்த வெற்றி. எந்த ஒரு மனுவையும் புறக்கணிக்காமல் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

திமுக இளைஞரணிக்காக மாவட்ட செயலா்களிடமிருந்து இதுவரை ரூ.10 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வங்கியில் வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டி மூலம் பொதுமக்களுக்கு தேவையான நல உதவிகள் செய்யப்படும் என்றாா்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட செயலா் க.சுந்தா் வீரவாள் வழங்கினாா். விழாவில் ஒன்றியச் செயலா்கள் சாலவாக்கம் குமாா், கே.ஞானசேகரன், த.குமணன், குமாா், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.