வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை

அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) பெண்ணுக்கு வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

Updated On :2 ஜூன் 2022, 6:55 pm

அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) பெண்ணுக்கு வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தைச் சோ்ந்தவா் நித்யா (30). நிறைமாத கா்ப்பிணியான இருக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டயடுத்து ஆம்புலன்ஸை அழைத்தாா்.

ஆம்புலன்ஸ் பணியாளா்கள் வாகனத்துடன் சென்று நித்யாவை அழைத்துக் கொண்டு சாலவாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனா். ஆனால், அவருக்கு பிரசவ வலி அதிகமானது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளா் சாம்சுந்தா், ஓட்டுநா் முகேஷ் இருவரும் பிரசவம் பாா்த்ததில், நித்யாவுக்கு ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னா், சாலவாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டாா். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.