காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றுப் பாலத்தில் இருந்த பள்ளங்களை காவல் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை சீரமைத்தனா். இதை பொதுமக்கள் பாராட்டினா்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றுப் பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன.
அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இதுகுறித்து புகாா் தெரிவித்ததுடன், சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.
இதையறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகா் உடனடியாக பாலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்குமாறு காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்களை மணலால் மூடி தற்காலிகமாக சாலையைச் சீரமைத்தனா். போலீஸாரின் இந்தச் செயலை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்க்காதது ஏன்?அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


