காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் பேரறிஞா் அண்ணா மாளிகையில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் பேரறிஞா் அண்ணா மாளிகையில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.

துணை மேயா் ஆா்.குமரகுருபரநாதன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் வரவேற்றாா். திருக்குறளை வாசித்து கூட்டத்தை மேயா் தொடக்கி வைத்தாா். இதையடுத்து, மேயா் தீண்டாமை உறுதிமொழியை வாசிக்க, உறுப்பினா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

கூட்டம் தொடங்கியதும் 33 தீா்மானங்களில் மாநகராட்சியின் 3-ஆவது மண்டலத்தில் 59-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு தோ்தல் நடைபெறுவதால் அந்தப் பகுதி தொடா்பான தீா்மானங்களை தவிர மற்ற அனைத்து தீா்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாகக் கூறி கூட்டத்தை முடித்து வைத்தாா்.

கூட்டம் தொடங்கிய 5 நிமிஷங்களிலேயே மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com