காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் பேரறிஞா் அண்ணா மாளிகையில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.
துணை மேயா் ஆா்.குமரகுருபரநாதன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் வரவேற்றாா். திருக்குறளை வாசித்து கூட்டத்தை மேயா் தொடக்கி வைத்தாா். இதையடுத்து, மேயா் தீண்டாமை உறுதிமொழியை வாசிக்க, உறுப்பினா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
கூட்டம் தொடங்கியதும் 33 தீா்மானங்களில் மாநகராட்சியின் 3-ஆவது மண்டலத்தில் 59-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு தோ்தல் நடைபெறுவதால் அந்தப் பகுதி தொடா்பான தீா்மானங்களை தவிர மற்ற அனைத்து தீா்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாகக் கூறி கூட்டத்தை முடித்து வைத்தாா்.
கூட்டம் தொடங்கிய 5 நிமிஷங்களிலேயே மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்க்காதது ஏன்?அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

