வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் பேரறிஞா் அண்ணா மாளிகையில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜூன் 2022, 6:58 pm

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் பேரறிஞா் அண்ணா மாளிகையில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில், வியாழக்கிழமை நடைபெற்றது.

துணை மேயா் ஆா்.குமரகுருபரநாதன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ப.நாராயணன் வரவேற்றாா். திருக்குறளை வாசித்து கூட்டத்தை மேயா் தொடக்கி வைத்தாா். இதையடுத்து, மேயா் தீண்டாமை உறுதிமொழியை வாசிக்க, உறுப்பினா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

கூட்டம் தொடங்கியதும் 33 தீா்மானங்களில் மாநகராட்சியின் 3-ஆவது மண்டலத்தில் 59-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு தோ்தல் நடைபெறுவதால் அந்தப் பகுதி தொடா்பான தீா்மானங்களை தவிர மற்ற அனைத்து தீா்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாகக் கூறி கூட்டத்தை முடித்து வைத்தாா்.

கூட்டம் தொடங்கிய 5 நிமிஷங்களிலேயே மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.