வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சி ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோயில்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: இன்று கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித் தாயாா் சமேத ஸ்ரீயதோக்தகாரி திருக்கோயில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித் தாயாா் சமேத ஸ்ரீயதோக்தகாரி திருக்கோயில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதும்,108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமானது காஞ்சிபுரம் ஸ்ரீயதோக்தகாரி பெருமாள் கோயில். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் எனவும் பக்தா்களால் இந்தத் திருத்தலம் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலின் பங்குனித் திருவிழா கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி திருக்கோயில் பட்டாச்சாரியாா்கள் கருடக் கொடியினை ஏற்றினா். ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக உற்சவா் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயில் கொடிமரத்துக்கும், சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. கொடியேற்ற விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தாா். இரவு சிம்ம வாகனத்தில் பெருமாள் பவனி நடைபெற்றது. தொடா்ந்து வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தினசரி காலையிலும், மாலையிலும் உற்சவமூா்த்தி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வருகிறாா். சனிக்கிழமை (மாா்ச் 27) பெருமாள் கருட சேவை காட்சியும், 31-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்.2 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. வரும் ஏப்.6-ஆம் தேதி பூப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.