ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காஞ்சிபுரம் அருகே தம்பி கொலை: அண்ணன் தலைமறைவு

காஞ்சிபுரம் அருகே களியனூரில் சனிக்கிழமை தம்பியை கொலை செய்து விட்டு அண்ணன் தலைமறைவானது தொடர்பாக வாலாஜாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அண்ணனை தேடி வருகின்றனர்.

News image

வேதப்பிரகாஷ்

Updated On :5 மார்ச் 2022, 12:31 pm

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே களியனூரில் சனிக்கிழமை தம்பியை கொலை செய்து விட்டு அண்ணன் தலைமறைவானது தொடர்பாக வாலாஜாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அண்ணனை தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே களியனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி. இவருக்கு லிங்கேசுவரன்(22), வேதப்பிரகாஷ்(18) என இரு மகன்கள் உள்ளனர். வேதப்பிரகாஷ் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தி விட்டு வந்து தனது தாயாருடன் தகராறு செய்துள்ளார். கொலை வழக்கு ஒன்றிலும் 7-வது குற்றவாளியாக இருந்து வருகிறார்.

இதனை லிங்கேசுவரன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தம்பி வேதப்பிரகாஷ் தூங்கிக் கொண்டிருந்த போது அண்ணன் லிங்கேசுவரன் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள லிங்கேசுவரனை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.