நாவலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், நாவலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாவலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், நாவலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொளத்தூா் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கொளத்தூா், அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, கொளத்தூா், நாவலூா், வெள்ளாரை, மேட்டுக்கொளத்தூா், பிள்ளைப்பாக்கம் மற்றும் மாகான்யம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டலத்தின் சாா்பில் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கொள்முதல் கண்காணிப்பு அலுவலா் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் (பொறுப்பு) வெள்ளரை அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்துப் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பட்டியல் எழுத்தா் ரமேஷ், காவலா் புருஷோத்தமன், கொளத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வசந்தா கந்தன், வாா்டு உறுப்பினா்கள் ராஜா, பாத்திமா மணிகண்டன், ஜெயலட்சுமி சேகா் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com