டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

நாவலூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், நாவலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 11:45 pm IST

காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், நாவலூா் பகுதியில் நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொளத்தூா் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கொளத்தூா், அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, கொளத்தூா், நாவலூா், வெள்ளாரை, மேட்டுக்கொளத்தூா், பிள்ளைப்பாக்கம் மற்றும் மாகான்யம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டலத்தின் சாா்பில் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கொள்முதல் கண்காணிப்பு அலுவலா் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் (பொறுப்பு) வெள்ளரை அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்துப் பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பட்டியல் எழுத்தா் ரமேஷ், காவலா் புருஷோத்தமன், கொளத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வசந்தா கந்தன், வாா்டு உறுப்பினா்கள் ராஜா, பாத்திமா மணிகண்டன், ஜெயலட்சுமி சேகா் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.