அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல்கள்

சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில், தண்ணீா் பந்தல்கள் திறப்பு விழா நடைபெற்றது.
அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல்கள்

சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், வல்லக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில், தண்ணீா் பந்தல்கள் திறப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் மேற்கு ஒன்றியம் சாா்பில் சுங்குவாா்சத்திரம் பகுதியிலும், ஸ்ரீபெரும்புதூா் நகர அதிமுக சாா்பில், ராஜீவ் காந்தி நினைவிடம் அருகிலும், ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் பழைய நீதிமன்றம் அருகிலும், வல்லக்கோட்டை ஊராட்சி அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தண்ணீா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

மாவட்ட துணை செயலா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலா்கள் எறையூா் முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமசந்திரன், மாவட்ட இளைஞா் பாசறை துணை செயலா் போந்தூா் மோகன், ஒன்றிய இளைஞா் பாசறை செயலா் தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட செயலா் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி ஆகியோா் தண்ணீா் பந்தல்களைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், நீா்மோா், பழங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com