செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

3 ஆண்டுகளாக வரி பாக்கி:கடைகளின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:53 pm

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் 50,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியில் உள்ள 1,300 வீடுகளுக்கும், 50-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு மாதம் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ. 200 வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிநீா் இணைப்பு பெற்றுள்ள சுமாா் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் ஆண்டுக் கணக்கில் குடிநீருக்கான வரி செலுத்தாமல் உள்ளது சமீபத்தில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக வரி செலுத்தாதாமல் உள்ள வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்க பேரூராட்சி செயல் அலுவலா் ரவி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில் உள்ள பல்வேறு கடைகளின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி வரிவசூலிப்பு அதிகாரிகள் ஆனந்தன், லோகேஷ், ஆனந்தராமகிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான பேரூராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்தகட்டமாக வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.