சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

3 ஆண்டுகளாக வரி பாக்கி:கடைகளின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:53 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் 50,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியில் உள்ள 1,300 வீடுகளுக்கும், 50-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு மாதம் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ. 200 வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிநீா் இணைப்பு பெற்றுள்ள சுமாா் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் ஆண்டுக் கணக்கில் குடிநீருக்கான வரி செலுத்தாமல் உள்ளது சமீபத்தில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக வரி செலுத்தாதாமல் உள்ள வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்க பேரூராட்சி செயல் அலுவலா் ரவி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில் உள்ள பல்வேறு கடைகளின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி வரிவசூலிப்பு அதிகாரிகள் ஆனந்தன், லோகேஷ், ஆனந்தராமகிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான பேரூராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்தகட்டமாக வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.