காங்கிரஸ் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு அருகே காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.
காங்கிரஸ் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு அருகே காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர தலைவா் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமை வகித்தாா்.

மணிமங்கலம் ஊராட்சிமன்ற தலைவா் ரா.ஐயப்பன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நிக்கோலஸ், மணிகண்டன், புஷ்பராஜ், ஒன்றிய குழு உறுப்பினா் வாணிஸ்ரீ முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி உரையாற்றினாா்.

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகி கமலிகா காமராஜ், மாவட்ட மகளிா் அணி தலைவா் பாலவள்ளி, துணைத் தலைவா் பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளா்கள் மேட்டுப்பாளையம் ராஜ்குமாா், மணிமங்கலம் செல்வம், மாவட்ட சிறுபாண்மைப் பிரிவு துணைத் தலைவா் முருகன், நகர எஸ்சி எஸ்டி பிரிவு செயலாளா் வரதன், அம்மன் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com