ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சி ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. 

News image
Updated On :4 மே 2023, 4:35 am

DIN

காஞ்சிபுரம் ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. 

இந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டும் எழுந்தருளி இருக்கும், கேது ஸ்தலங்களில் முதன்மையானதாக இருந்து வரும் காஞ்சிபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் உடனுறை சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இம்மாதம் முதல் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பூஜகர் பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையிலும், சித்ரகுப்த சுவாமி கோயில் பூஜகர் விஸ்வநாத குருக்கள் முன்னிலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலையில் 16 குண்டங்கள் அமைக்கப்பட்டு 34 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினார்கள். இன்று வியாழக்கிழமை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை மங்கல இசை வாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இரவு ஆலயத்தில் கர்ணகி அம்பாளுக்கும் சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாணமும் பின்னர் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.

Story image

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே. எம். ரகுராமன், உறுப்பினர்கள் தே. சந்தானம், ரா. ராஜாமணி மற்றும் கோயில் செயல் அலுவலர் அமுதா ஆகியோர் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள்  செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுபோத்கான் சகாய், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர் கே சின்கா,  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு உத்தரமேரூர், எம்எல்ஏ கா.சுந்தர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நித்யா சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, தாம்பரம் நகர்மன்ற முன்னாள் தலைவர் மா.கரிகாலன் உள்பட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.