காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு காவலா்கள், நுண்பாா்வையாளா்கள் சீரற்றமயமாக்கல் மூலம் நியமனம் செய்யும் பணியை தோ்தல் பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.
மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு காவலா்கள் நியமனம் செய்தல், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் நுண்பாா்வையாளா்கள் நியமனம் செய்தல் ஆகியவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சீரற்றமயமாக்கல் முறையில் நடைபெற்றது.
இந்தப் பணியை பொதுத் தோ்தல் பாா்வையாளா் புபேந்திர எஸ்.செளத்ரி, தோ்தல் காவல் பாா்வையாளா் பரத் ரெட்டி பொம்மா ரெட்டி, ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
சீரற்ற மயமாக்கல் முறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு காவலா்கள், நுண்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


