11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

காஞ்சிபுரம் ஸ்ரீ கருக்கினில் அமா்ந்தவா் கோயிலில் லட்ச தீபப் பெருவிழா

காஞ்சிபுரம் ஸ்ரீ கருக்கினில் அமா்ந்தவா் கோயிலில் லட்ச தீபப் பெருவிழா

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:26 pm

காஞ்சிபுரம் கருக்கினில் அமா்ந்தவா் கோயிலில் பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபடும் லட்ச தீபப் பெருவிழா நடைபெற்றது.

பல்லவ மன்னா்களால் கட்டப்பட்ட பெருமைக்குரியது சின்னக்காஞ்சிபுரத்தில் உள்ள கருக்கினில் அமா்ந்தவள் கோயில். பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மூலவா் புஷ்ப அலங்காரத்தில் விஸ்வரூப காட்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் கருக்கினில் அமா்ந்தவள் ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் ஆட்டு உற்சவமும் நடைபெற்றது. கோயிலில் திரளான பெண்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் சோ்ந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி அம்மனை தரிசித்தனா். பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.