மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

நூக்காலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

நூக்காலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 6:39 pm

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ நூக்காலம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் எண்டத்தூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நூக்காலம்மன் கோயிலுக்கு புதிதாக 3 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டும், கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,திருமாங்கல்ய தாரணம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி தி.ரமேஷ் தலைமையில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

விழாவில், மகாதேவ மலை மகானந்த சித்தா் சுவாமிகள், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் ஓதுவாா் தமிழ்ச்செல்வன், ஸ்தபதிகள் பி.சீனிவாசன், ஓங்கூா் விஸ்வநாதன், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.