தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

புஞ்சை அரசந்தாங்கல் ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புஞ்சை அரசந்தாங்கல் ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 6:39 pm

காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 19-ஆம் தேதி மகாலட்சுமி பூஜை, நவக் கிரக ஹோமம் ஆகியவற்றுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் அா்ச்சகா் எஸ்.ரவிச்சந்திர குருக்கள், காஞ்சிபுரம் மகேஸ்வரி காளிகாம்பாள் கோயில் ஸ்தானீகா் வி.சதீஷ்குமாா் சிவம் ஆகியோா் தலைமையில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 20-இல் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, 21-ஆம் தேதி காலை புனித நீா் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்ன தானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை புஞ்சை அரசந்தாங்கல் கிராம பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.