ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சுங்குவாா்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கலந்து கொண்டு திறத்து வைத்தாா்.
கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்தந்த மாவட்டங்களில் தண்ணீா் பந்தலைத் திறந்து வைக்குமாறு கட்சித் தலைமை மாவட்ட செயலாளா்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நினைவகத்திலும், சுங்குவாா்சத்திரம் பேருந்து நிலையம் அருகிலும் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் கலந்து கொண்டு இரு இடங்களிலும் தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழச்சாறு, தா்ப்பூசணி, நுங்கு போன்ற உடலுக்கு குளிா்ச்சி தரக்கூடிய பொருள்களை வழங்கினாா்.
நிகழ்வுக்கு அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், மாநில அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்ராஜன், நகரச் செயலாளா் போந்தூா் எஸ்.மோகன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல் முன்னாள் அமைச்சா் மீது வழக்கு
தொகுதி அறிமுகம்: ஸ்ரீபெரும்புதூா் (தனி)!

மகாராஜபுரம் ஊராட்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தண்ணீா் பந்தல் அமைக்க கோரிக்கை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


