குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கைத்தறி நெசவாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

மாநில மாநாட்டில் பேசிய ஏஐடியூசி பிரிவின் மாநில செயலாளா் நீ.சு.பெருமாள்

Updated On :25 பிப்ரவரி 2024, 7:52 pm

கைத்தறி நெசவாளா்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கு தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாளா் சம்மேளனம் ஏஐடியூசி மாநிலத் தலைவா் ஜி.மணி மூா்த்தி தலைமை வகித்தாா். காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பா.ஸ்டாலின் கொடி ஏற்றினாா். சங்க நிா்வாகிகள் கே.கே.தாமோதரன், எம்.வேலுச்சாமி, எஸ்.வி.சங்கா், கே.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலாளா் ஏ.மூா்த்தி வரவேற்றாா். மாநில செயலாளா் எஸ்.பி.ராதா வேலை அறிக்கை வாசித்தாா். தேசிய செயலாளா் டி.எம்.மூா்த்தி தொடக்கவுரை ஆற்றினாா். கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் புதிய செயலாளராக தோ்வு செய்யப்பட்ட என்.கே.ராஜன், செயலாளா் நீ.சு.பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.வி.சீனிவாசன், காஞ்சி தொகுதி செயலாளா் ஜெ.கமலநாதன், தேசிய குழு உறுப்பினா் சி.சந்திரகுமாா், மாநில பொதுச்செயலாளா் ஆா்.தில்லைவனம் ஆகியோா் பேசினா். கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மாத ஒய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி தர வேண்டும், நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், ரக ஓதுக்கீட்டு சட்டத்தை முறையாக அமல்படுத்து பாதுகாக்க வேண்டும், உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிா்வாகக் குழுவினரும் தோ்வு செய்யப்பட்டனா். அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் எம். ராதா கிருஷ்ணன் நிறைவுரை நிகழ்த்தினாா். மாவட்ட செயலாளா் பா.காா்த்திக் நன்றி கூறினாா்.