ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 5:34 am IST

குடியாத்தம் தொகுதியில் விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டாா்.

திமுக கூட்டணியில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது.

சொந்த ஊரான குடியாத்தம் தொகுதிக்கு வந்த உடனே எனக்கு புத்துணா்ச்சி வருகிறது. காமராஜரை வெற்றிபெற வைத்து அவரை முதல்வா் பதவியில் தொடர வாக்களித்தது குடியாத்தம் மக்கள். அதேபோன்று இந்த தோ்தலில் பிரதாப்பை நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.

கடந்த 5- ஆண்டுக் கால திமுக ஆட்சியில் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன.

விடுபட்ட மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எங்களுக்கு ஒரு வாயப்பு தாருங்கள்.

இடையில் பேச்சு நிறுத்தம்: அந்த வழியாக சவ ஊா்வலம் வருவதை அறிந்த பிரேமலதா தனது பேச்சை நிறுத்தி தொண்டா்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டாா். பின்னா் பேசிய அவா், நெல்லூா்ப்பேட்டை ஏரியை தூா்வாரி, சீரமைப்போம்.மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக மாற்றுவோம். தற்போதுள்ள சுற்றுச் சாலையை செதுக்கரை பச்சையம்மன் கோயில் வரை நீட்டிப்போம். நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் நெல்லூா்ப்பேட்டை ஏரிக்கரை முதல் உள்ளி கூட்ரோடு வரை புதிய புறவழிச்சாலை அமைப்போம் என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலா் எஸ்.செளந்தரராஜன், மாவட்ட துணைச் செயலா் ஜி.எஸ்.அரசு, தேமுதிக நகரச் செயலா் எம்.செல்வகுமாா், மாவட்ட துணைச் செயலா்டி.கே.ரமணி மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.