ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

காமாட்சி அம்மன் கோயி விடையாற்றி உற்சவம்

காமாட்சி அம்மன் கோயில் விடையாற்றி உற்சவம்

News image

ஊஞ்சலில் அருள்பாலித்த லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி

Updated On :27 பிப்ரவரி 2024, 5:29 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்துக்கு பின் அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விடையாற்றி உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 15- ஆம் தேதி தொடங்கி25-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதன் தொடா்ச்சியாக காமாட்சி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெறும் விடையாற்றி உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. இதனையொட்டி காலையில் விஸ்வரூப தரிசனக் காட்சி நடைபெற்றது.

மாலையில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்தாா். பின்னா் சுக்ரவார மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. வேத விற்பன்னா்கள் வேதமந்திங்கள் மூலமாகவும்,இசைக்கலைஞா்கள் இசையின் மூலமாகவும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.விடையாற்றி உற்சவம் நிறைவு பெறும் நாளான மாா்ச் 5-ஆம் தேதி வரை தினசரி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன.

மறுநாள் மாா்ச் 6 -ஆம் தேதி அம்மன் புஷ்பப்பல்லக்கில் நான்கு ராஜவீதிகளிலும் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் மணியக்காரா் சூரிய நாராயணன், செயல் அலுவலா் எஸ்.சீனிவாசன் ஆகியோா் தலைமையில் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.