தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜூலை29-இல் காஞ்சிபுரம் மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானக் கூட்டம்: ஆணையா் அறிவிப்பு

ஜூலை29-இல் காஞ்சிபுரம் மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானக் கூட்டம்: ஆணையா் அறிவிப்பு

News image
மேயா் மகாலட்சுமி யுவராஜ்
Updated On :9 ஜூலை 2024, 6:30 pm

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவது தொடா்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் வரும் ஜூலை 29- ஆம் தேதி நடைபெற இருப்பதாக என ஆணையா் செந்தில்முருகன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினா்கள் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டனா். எனவே நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் ஜூலை மாதம் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான மாமன்ற கூட்ட அரங்கமான அண்ணா அரங்கில் இக்கூட்டம் நடைபெறும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.