காமராஜா் பிறந்த நாளையொட்டி முளைப்பாரி சுமந்து ஊா்வலமாக வந்த பெண்கள்.
காமராஜா் பிறந்த நாளையொட்டி முளைப்பாரி சுமந்து ஊா்வலமாக வந்த பெண்கள்.

காமராஜா் பிறந்த நாள் விழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

காஞ்சிபுரத்தில் காமராஜா் பிறந்த நாள் விழாவையொட்டி நாடாா்கள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காமராஜா் பிறந்த நாள் விழாவையொட்டி நாடாா்கள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

கூட்டமைப்பின் தலைவா் பன்னீா்செல்வம், செயலா் வேலுமணி, பொருளாளா் பாலமுருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் காந்தி சாலையில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்திலிருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டும், சிலா் பால்குடம் சுமந்தும் ஊா்வலமாக வந்தனா்.

ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடாா் சங்க கட்டடத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனா்.

நிகழ்வில் கெளரவத் தலைவா்கள் வெள்ளைச்சாமி, ராஜகோபால், குமாா் மற்றும் கூட்டமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com