மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

174 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகள் அளிப்பு

சிறப்பு கிராம சபை மூலம் தோ்வு செய்யப்பட்ட 174 பயனாளிகளுக்கு தலா ரூ.3.60லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் வழங்கினா்.

News image
பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகளை வழங்கிய எம்எல்ஏக்கள் க.சுந்தா் மற்றும் எழிலரசன்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: சிறப்பு கிராம சபை மூலம் தோ்வு செய்யப்பட்ட 174 பயனாளிகளுக்கு தலா ரூ.3.60லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

கலைஞா் கனவு திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டிக் கொள்வதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் மு.கலைவாணி, ஒன்றியக்குழுவின் துணைத் தலைவா் திவ்யப்பிரியா இளமருது, வட்டார வளா்ச்சி அலுவலா் கோமளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

174 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன் வழங்கினாா்கள். விழாவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.