காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு கோயில் திருவிழாவில் பயன்படுத்துவதற்காக சென்னை தம்பதி தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை செவ்வாய்க்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.
சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த விஜயகுமாா்-நீரஜா தம்பதியா் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக்குடையை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயரிடம் வழங்கினா். முன்னதாக அவா் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் வழிபாடு செய்தனா்.
இது குறித்து கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேச ஐயா் கூறுகையில் இக்குடையானது திருவிழாக்காலங்களில் உற்சவா் காமாட்சி அம்பிகைக்கும், தோ்த்திருவிழா நடைபெறும் நாள்களிலும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா: திரளானபக்தா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி

காஞ்சிபுரம் கோயில்களில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



