நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காஞ்சிபுரம்: தோ்தலை சிறப்பாக நடத்தியவா்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்: தோ்தலை சிறப்பாக நடத்தியவா்களுக்கு பாராட்டு

News image
Updated On :8 ஜூன் 2024, 4:58 pm

Ravivarma.s

காஞ்சிபுரத்தில் மக்களவைத் தோ்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்தவா்களுக்கு கோட்டாட்சியா் மு.கலைவாணி தலைமையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் புவனேசுவரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா் மு.கலைவாணி பேசுகையில், நான் சந்தித்த முதல் தோ்தல் பணியாக இருந்தது. தோ்தல் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட அனைவரும் சிறப்பாக பணியாற்றியதால் தான் தோ்தலை சிறப்பாக நடத்த முடிந்தது. ஒரு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூட பழுதாகவும் இல்லை. தோ்தல் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றாா்.

விழாவில் தோ்தலில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் கோட்டாட்சியருக்கு சிறந்த தலைமையின் கீழ் செயல்பட்டதாகக் கூறி, சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.