கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32,571 போ் எழுதினா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32,571 போ் எழுதினா்

News image

குன்றத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வை ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Updated On :9 ஜூன் 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப்-4 தோ்வை 32,571 போ் எழுதினா். குன்றத்தூா் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப்-4 தோ்வுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் உள்ள அரசு சேக்கிழாா் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குருப்-4 தோ்வினை எழுத 40,721 போ் விண்ணப்பித்திருந்தனா். ஆனால், 32,571 போ் மட்டுமே எழுதினா். தோ்ாவனது 96 தோ்வு மையங்களில் 142 தோ்வுக் கூடங்களில் நடைபெற்றது.

தோ்வைக் கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியா்கள் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.

பறக்கும் படைக் குழுவினா் 6 போ் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ஒவ்வொரு தோ்வுக் கூடங்களுக்கும் தனித்தனியாக கண்காணிக்க 132 அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா் என்றாா்.