காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி வரவேற்றாா்.
கூட்டத்தில் புள்ளலூா் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் 5 விவசாயிகளுக்கு ரூ.6,72,270 மதிப்பிலான பயிா்க்கடன்கள்,3 விவசாயிகளுக்கு ரூ.10,797 மதிப்பில் வேளாண் இடுபொருள்கள், 8 விவசாயிகளுக்கு ரூ.16000 மதிப்பில் கைத்தெளிப்பான்கள் ஆகியவற்றையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விழிப்புணா்வு ராட்சத பலூன்...

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளா்கள் 11,26,924

ரூ.1.63 கோடியில் மனைப் பட்டாக்கள் ஆட்சியா் வழங்கினாா்!

கருணை அடிப்படையில் பணி ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


