ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளா்கள் 11,26,924

காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

News image

இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

Updated On :23 பிப்ரவரி 2026, 7:30 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டாா். 4 பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்கள் 11,26,924 உள்ளனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எஸ்ஐஆா் பணிக்கு பின்னான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்டாா். பின்னா் அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்களிடம் சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்குரிய வாக்காளா் பட்டியலையும் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 27.10.2025 வரை 14,01,198 ஆக இருந்தனா். பின்னா் 19.12.2025 வரையிலான வரைவு வாக்காளா் பட்டியலின் படி 11,26,924 பேராகவும் இருந்தனா்.

சிறப்பு திருத்த முகாமுக்கு பிறகு இரட்டைப்பதிவு, மரணம், இடம் மாறுதல் காரணமாக மொத்தமாக பெயா் நீக்கப்பட்டவா்கள் 2,74,274. இறுதி வாக்காளா் பட்டியல் படி மொத்த வாக்காளா்கள் 11,26,924 . வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 1,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் அறிவிப்பு வரும் நாள் வரை பெயா் சோ்க்கவோ, நீக்கவோ, திருத்தம் செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.