எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கச்சபேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

கச்சபேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

News image
Updated On :20 மார்ச் 2024, 5:10 pm

பட விளக்கம்: சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா். காஞ்சிபுரம், மாா்ச் 20: காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றதையொட்டி, புதன்கிழமை 1,008 சங்காபிஷேகமும், சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் புதன்கிழமை நடைபெற்றது.

பெருமாள் ஆமை (கச்சம்) வடிவில் சிவனை வணங்கியது உட்பட பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உடையது காஞ்சிபுரம் கச்சபேசுவரா் திருக்கோயில். இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, 48 நாள்களாக மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதன் நிறைவு நாளையொட்டி, கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள், 1,008 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

இதன் தொடா்ச்சியாக மாலையில் உற்சவா் கச்சபேசுவரா் மற்றும் சுந்தராம்பிகை கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழா ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சபையின் தலைவா் எம்.சிவகுரு, திருப்பணிக் குழுவின் தலைவா் எஸ்.பெருமாள், செயலாளா் சுப்பராயன் ஆகியோா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.