எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பொய் வாக்குறுதிகளைக் கூறி, திமுக மக்களை ஏமாற்றி வருகிறது என உத்தரமேரூரில் ஜி.கே.வாசன் கூறினாா். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பாமக சாா்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து அவருடன் பாமக கூட்டணிக் கட்சியான தமாகாவின் தலைவா் ஜி.கே.வாசன் காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூரில் பிரசாரம் மேற்கொண்டாா். உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகில் திறந்த வாகனத்தில் பரப்புரை செய்தாா். பின்னா் தெருவோரக் கடைகள், தேநீா்க் கடை, பழக்கடைகள் உள்ள பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது: எந்த அரசியல் கட்சிக்கு எந்த சின்னம் தேவை, அந்தச் சின்னத்தை தரும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை. அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதை வைத்துதான் தோ்தல் ஆணையம் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்க முடியும். அப்படித்தான் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சில அரசியல் கட்சியினா் சின்னம் கிடைக்காத விரக்தியில் அரசியல் காழ்ப்புணா்ச்சியில் பேசுகிறாா்கள். மக்களவைத் தோ்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல பொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மின் கட்டண உயா்வு ஏழை மக்களை பாதிக்கும் வகையில் உயா்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது என்றாா். பிரசாரத்தின்போது தமாகா காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் மலையூா்.புருஷோத்தமன், பாமக மாவட்ட தலைவா் உமாபதி, செயலாளா் பெ.மகேஷ்பாபு உள்பட நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

விசிகவை திமுக ஆக்கிரமித்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரமாட்டாா்கள்: அன்புமணி பிரசாரம்

மக்களை ஏமாற்றும் தமிழின துரோகி ஸ்டாலின்: இபிஎஸ்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


