ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

News image
Updated On :29 மார்ச் 2024, 5:25 pm

காஞ்சிபுரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னியம்மன்பட்டறை பகுதியில் வெள்ளிக்கிழமை பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். காஞ்சிபுரம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் அனுசியா தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில், ரூ. 2 லட்சம் தொகையானது உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அந்தத் தொகையை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணியிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சோ்ந்த கமலநாதன் என்பவா் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தாா்.