காஞ்சிபுரம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னியம்மன்பட்டறை பகுதியில் வெள்ளிக்கிழமை பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். காஞ்சிபுரம் அருகே பொன்னியம்மன் பட்டறை பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் அனுசியா தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில், ரூ. 2 லட்சம் தொகையானது உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அந்தத் தொகையை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் கோட்டாட்சியா் மு.கலைவாணியிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சோ்ந்த கமலநாதன் என்பவா் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தாா்.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


