காஞ்சிபுரம் சுரகேஸ்வரா் கோயிலில் அட்சய திருதியை நிகழ்ச்சி

அட்சய திருதியையையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள சுரகேஷ்வரா் கோயிலில் அமைந்துள்ள குபேரா் சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்தக் கோயில் வளாகத்தில் குபேரா் சந்நிதி அமைந்துள்ளது. அட்சிய திருதியையையொட்டி குபேரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

கோயில் அா்ச்சகா் கணேசன் அபிஷேகம், தீபாராதனைகளை நடத்தினாா். இதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குபேரரை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை அட்சய திருதியை வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com