ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தனியாா் இடத்தை ஆக்கிரமித்து பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தனியாா் இடத்தை ஆக்கிரமித்து பணம் கேட்டு மிரட்டியவா் கைது

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

ஸ்ரீபெரும்புதுாா்: ஒரகடம் அருகே தனியாா் தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த உணவகத்தை காலி செய்ய மறுத்ததுடன், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த மாத்துாா் பகுதியில் மின் சாதன பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் கொட்டகை அமைத்து உணவகம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து சாலை அமைப்பதற்காக தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த உணவகத்தை அப்புறபடுத்த வேண்டும் என தொழிற்சாலை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். அதற்கு உணவகத்தின் உரிமையாளா் மறுப்பு தெரிவித்ததுடன் ரூ. 10 லட்சம் தந்தால் அகற்றி விடுவதாக கூறியுள்ளாா். இதுகுறித்து தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஒரகடம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.

புகாரின் பேரில் தனியாா் நிறுவத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து உணவகம் நடத்தியதுடன் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய ஒரகடம் அடுத்த எறையூா் பகுதியை சோ்ந்த சக்திவேல் (35), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.