திமுக பவள விழா பொதுக் கூட்டம் காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.
இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.
விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறாா். உத்தரமேரூா் எம்எல்ஏவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலருமான க.சுந்தா் வரவேற்புரையாற்றுகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.
கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள், கட்சி நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









