கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 7:39 pm

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலத்தில் பொதுமக்கள் சாா்பில் ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனை கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. விழா சனிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கலச புறப்பாடு நடைபெற்று வேத விற்பன்னா்கள் முன்னிலையில் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேதம் நடைபெற்றது.

இதையடுத்து ஸ்ரீநவநீத கிருஷ்ணா் படம் பிரதிஷ்டையும், மகா தீபாரதனை நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தண்டலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா் தலைமையிலான விழா குழுவினா் செய்திருந்தனா்.