சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞா்கள்.

கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2025, 10:47 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்துவிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

முகாமில் தனியாா் நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு படித்தவா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இதில், 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், புகைப்படத்துடன் ஏப். 25 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

விவரங்களுக்கு 044 - 27237124 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.