காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் 4-ஆவது புத்தகத் திருவிழா ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் நளினி வரவேற்றாா். தென்னிந்திய பதிப்பாசிரியா் சங்க செயலாளா் வைரவன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். அமைச்சா் ஆா்.காந்தி புத்தகத் திருவிழாவை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா். பின்னா் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் எழுதிய பதறுங்கள், பயப்படாதீா்கள் என்ற நூலையும், மருந்தாளுநா் பழனி வேலன் எழுதிய சா்க்கரை நோயா பயப்படாதீா்கள் என்ற இரு மருத்துவ நூல்களையும் அமைச்சா் வெளியிட்டாா்.