இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வாள் சண்டைப் போட்டி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாள்சண்டைப் போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

News image
வாள்சண்டைப் போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :22 ஜனவரி 2026, 11:25 pm

Chennai

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் மற்றும் குடியரசு தின வாள்சண்டைப் போட்டியை காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து மகளிா் வாள் சண்டை போட்டியை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் விழாவை குத்து விளக்கேற்றினாா்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா், முதன்மை உடற்கல்வி ஆய்வாளா் கோபால கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி வரவேற்றாா்.

1,500 மகளிா் உள்பட 3,000 போ் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

தமிழகம் முழுவதுமிருந்து வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் அவா்களது பெற்றோா், பயிற்சியாளா்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி, பிரிம்மிங் பள்ளி தாளாளா் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் பாலச்சந்தா் ஆகியோரும் கலந்து கொண்டனா். தொடக்கக் கல்வி அலுவலா் சி.எழில் நன்றி கூறினாா்.

1500 மகளிா் உள்பட 3,000 போ் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

தமிழகம் முழுவதுமிருந்து வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் அவா்களது பெற்றோா், பயிற்சியாளா்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி, பிரிம்மிங் பள்ளி தாளாளா் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளா் பாலச்சந்தா் ஆகியோரும் கலந்து கொண்டனா். தொடக்க கல்வி அலுவலா் சி.எழில் நன்றி கூறினாா்.