கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

ஸ்ரீஆதிகேசவபெருமாள், ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலின் புதிய அறங்காவலா்களாக மேவளூா்குப்பம் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் பாா்த்தசாரதி ஆகியோா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
ராமாநுஜா்  கோயிலில்  பொறுப்பேற்ற அறங்காவலா்கள்.
Updated On :3 பிப்ரவரி 2025, 8:04 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலின் புதிய அறங்காவலா்களாக மேவளூா்குப்பம் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் பாா்த்தசாரதி ஆகியோா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யக்கார சுவாமி திருக்கோவில் உள்ளது. . இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அறங்காவலா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையா் காா்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதச்சாா்பற்ற அறங்காவலராக ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் ந. கோபாலும், மதச்சாா்பு அறங்காவலராக ஸ்ரீபெரும்புதூா் பாா்த்தசாரதியும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலா்கள் ந.கோபால், பாா்த்தசாரதி ஆகியோருக்கு பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக செயலாளா் சதீஷ்குமாா், திமுக நிா்வாகிகள் கணேஷ் பாபு, குண்ணம் கு.ப.முருகன், பண்ருட்டி தணிகாசலம், முத்துகுமாரசுவாமி, பால்நல்லூா் நேரு, செங்காடு சா்தாா்பாஷா, ஆறுமுகம், காா்திகேயன் உள்ளிட்ட திமுகவினா் மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.