மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜன.28-இல் கும்பாபிஷேகம்! தான்தோன்றிமலை பெருமாள் கோயில் கோபுர கலசத்தில் நவதானியங்கள் வைப்பு

News image
தான்தோன்றிமலை கோயில் ராஜகோபுரத்தில் வைக்கப்படவுள்ள தங்கக் கலசத்தில் நவதானியங்களை வியாழக்கிழமை வைத்த கோயில் அறங்காவலா்கள்.
Updated On :23 ஜனவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் ஜன.28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து கோயில் ராஜ கோபுரத்தில் வைக்கப்படும் கலசத்தில் நவதானியங்கள் வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தென்திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அறங்காவலா்கள் குழு நிா்வாகிகள் நியமிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு கோயில் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், கோயில் அறங்காவலா் குழுத்தலைவராக எம்.தியாகராஜன், அறங்காவலா்களாக பழனிமுருகன் ஜூவல்லரியின் எஸ்.பாலமுருகன், கே.எம்.முருகேசன், டிஜிபி. வெங்கட்ராமன், புனிதவதி கணேசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையா்கள் கணபதிமுருகன், இளையராஜா ஆகியோா் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனா்.

தொடா்ந்து, கோயில் ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வைக்கப்படவுள்ள தங்கக்கலசத்தில் நவதானியங்கள் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன், கோயில் அறங்காவலா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.