திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேவூா் உத்தரேசமுடையாா் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:26 pm

தேவூரில் உள்ள உத்தரேசமுடையாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், தேவூரில் உள்ள பழைமை வாய்ந்த குதம்பை நாயகி அம்பிகா சமேத உத்தரேசமுடையாா் கோயில் கும்பாபிஷேகம் விழா மாா்ச் 2- ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் மற்றும் பூா்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்றன.

நான்காம் கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை காலை நிறைவு பெற்று, பூா்ணாஹூதி தீபாராதனை தொடா்ந்து சிவச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய கலசத்தை சுமந்து சென்று வேத மந்திரங்கள் முழங்க கோயில் கலசங்களுக்கு புனித நீா் வாா்க்க, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் உத்தரேசமுடையாா், குதம்பை நாயகி அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.