மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் உடனுறை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 7:03 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் உடனுறை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சனிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால, 3-ஆம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை நான்காம் கால யாகபூஜையுடன் 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் முன்னிலையில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மூலவா் வீரட்டீஸ்வரா், சாந்தநாயகி அம்பாள், சாந்தவிநாயகா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் தொண்டை மண்டல ஆதினம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை, முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூா் பெருமாள், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட கவுன்சிலா் அமுதா செல்வம், ஊராட்சித் தலைவா் எஸ்.கா்ணன், கோயில் ஆய்வா் திலகவதி உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் சி.குருநாதன், க.கெஜலட்சுமி, சா.ஏழுமலை மற்றும் விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.