திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு

கடம்பூா் ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 7:35 pm

Din

காஞ்சிபுரம்: உத்தரமேரூா் ஒன்றியம் கடம்பூா் ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே கடம்பூா் ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தை யொட்டி விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் கொத்தடிமை தொழில் செய்து மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வசித்து வரும் பழங்குடியின மக்கள் எதிா்காலத்தில் எக்காரணத்தைக் கொண்டும் கொத்தடிமை தொழில் செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். நிகழ்வில் தொண்டு நிறுவன நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் பலரும் கலந்து கொண்டு உறுதிமொழியை வாசித்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி ராஜூ தலைமை வகித்து பேசினாா்.

கடம்பூா் ஊராட்சி தலைவா் வேங்கடபெருமாள், கட்டியாம்பந்தல் முன்னாள் ஊராட்சி தலைவா் சந்திரன், சமூக ஆா்வலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொத்தடிமை மீட்புக்கான மறுவாழ்வு நலச் சங்கத் தலைவா் கோபி வரவேற்றாா். கொத்தடிமை மீட்பு கண்காணிப்புக் குழு தலைவா் தங்கவேல் நன்றி கூறினாா்.